Falls

Falls
5 Falls

புதன், 13 அக்டோபர், 2010

ஒரு சைபர் குற்றம் - 6 (கடைசி அத்தியாயம்)

ஒரு சைபர் குற்றம் - 1

ஒரு சைபர் குற்றம் - 2

ஒரு சைபர் குற்றம் - 3

ஒரு சைபர் குற்றம் - 4

ஒரு சைபர் குற்றம் - 5
போலிஸுடன் போனதும் டாக்டர் சந்திரன் எல்லாக் குற்றங்களையும் ஒப்புக் கொண்டார்.

ஓரு விபத்தில் தலையில் அடிபட்டதால அன்பு கோமா ஸ்டேஜுக்குப் போயிட்டான். அவன்கிட்டேதான் நாங்க முதல் பரிசோதனையை செஞ்சோம். முதல்ல சிஸ்டம் புரோகிராம் மட்டும்தான் லோடு பண்ணினோம். அன்பு இயங்க ஆரம்பிச்சான். நடந்தான். ஓடினான். ஆடினான் . . . .ஆனா பேசலை.

நாங்க யோசிச்சோம். அவனுக்கு அப்போதைக்கு மொழியில்லே . . படிப்பில்லை . . பிறந்த குழந்தை மாதிரிதான் அவனோட பிஹேவியர் இருந்துச்சு.

அப்போதான் அமைச்சர் இளவேந்தன் ஒரு விஷயம் சொன்னார். அன்பு ஒழுங்காப் படிக்கலே. லை்ப் பூராவும் வேஸ்ட் பண்ணிட்டான். இப்போ ஒரு நல்ல, படிச்ச, புத்திசாலி எம்.பி.ஏ வோட பயோ-இன்பர்மேடிக்ஸ் தகவலை அவனுக்கு ஏத்திட்டா அவனை ஏதாவது ஒரு பிசினஸ்லே செட்டில் பண்ணிடலாம்னு சொன்னார்.

நாங்க பிளான் பண்ணினது கீர்த்தியோட பயோ-இன்பர்மேடிக்ஸ் தகவல். அவ ஒரு எம்.பி.ஏ எச் ஆர். ஆனா அதுக்கு டாக்டர் ஸ்ரீதரன் சம்மதிக்கலே. படிப்பு, புத்திசாலித்தனம் இதெல்லாம் ஒரு தனி மனுஷனோட பல வருஷத்து உழைப்பு. அதை இப்பிடி கொள்ளையடிக்கறது தப்பு. அது இதுன்னு தர்மம் பேசினாரு.

அதனால அமைச்சர் டாக்டர் ஸ்ரீதரன்னை தீர்த்துக் கட்டறதுக்கு சங்கர்னு ஒரு கூலிப்படை ஆளை ஏற்பாடு பண்ணி என்கிட்டே கூட்டிட்டு வந்தாரு. நானும் சங்கரோட பயோ-இன்பர்மேடிக்ஸ் தகவலை காப்பி எடுத்து பார்த்துட்டு நம்பிக்கையான ஆளுன்னு பாஸிடிவான ரிப்போர்டை அமைச்சருக்கு அனுப்பினேன்.

ஆனா அன்புக்கு பயோ-இன்பர்மேடிக்ஸ் தகவலை டிரான்ஸ்பர் பண்ணும் போது தவறுதலா சிடி டிஸ்க் மாறிப் போய் அந்த கூலிப் படை சங்கரோட தகவலை ஏத்திட்டேன். எனக்கு கம்ப்யூட்டர்லே அதிக பயிற்சி இல்லாததால கீர்த்தியோட மூளைலேயும் தவறுதலா மஞ்சுளாவோட தகவலை ஏத்திட்டேன்.

அன்பு டாக்டரைக் கொன்னதுக்கப்புறம் தான் நாங்க இதைக் கண்டுபிடிச்சோம். ஸ்பாட்டிலேயே அவன் போலிஸ்லே மாட்டினதாலே எங்களால அவனுக்கு எந்த டிரீட்மென்டும் குடுக்க முடியலே.

*************************************************************************************

எல்லோரும் அதே அடையாறு காபி ஷhப்பில் புல் தரையில் உட்கார்ந்திருந்தார்கள்.

பாஸ். இந்த கேஸ்ல யாரு கொலைகாரன் ?. சட்டம் யாரைத் தண்டிக்கணும் ? - அனந்த்

கொலை செஞ்சது அன்பு. ஆனா அவன்மூளைல செயல்பட்டது கூலிப்படை ஆளோட பிளான்.

தூண்டினது அமைச்சர்னு அவரைக் கைது பண்ணலாம். ஆனா அவர் தூண்டினது அன்புவை இல்லே. அன்பு அப்பிடி சாட்சி சொல்லவும் மாட்டான்.

டாக்டர் ஸ்ரீதரன் இந்த hpசர்ச்சை ரிஜpஸ்டர் பண்ணி செய்துக்கிட்டிருக்கார். ஆனா ஒரு மனுஷனோட சம்மதம் இல்லாம யாரும் அவனுக்கு டிரீட்மென்ட் குடுக்கக் கூடாது..

டாக்டர் சந்திரன் அன்புக்கு செஞ்சது டிரீட்மென்ட். ஆனா கீர்த்திக்கிட்டேயும், மஞ்சுளாகிட்டேயும் அனுமதியில்லாம தகவல் எடுத்தது திருட்டு. அவங்க கம்ப்ளைன்ட் குடுத்தா டாக்டர் சந்திரன் மேலே திருட்டு வழக்கு போடலாம். ஆனா என்ன திருட்டு போச்சு ?

பார்க்கலாம். கோர்ட் இதை எப்பிடி ஹhன்டில் பண்றhங்கன்னு.

முதல்லே நம்ம சட்டத்திலே சைபர் கிரைம் எல்லாம் சேர்த்து மாத்தணும். டாக்டர் சந்திரன் எஜுகேஷன் தகவலை மட்டும் ஏத்தாம மொத்த தகவலையும் ஏத்துனதால கீர்த்தியும் இப்போ மஞ்சுளான்னு சொல்லிட்டிருக்கா. எனக்கு ஜhலிதான். ரெண்டு வேற வேற ஷேப்புல ரெண்டு மஞ்சுளா. - சந்தீப் விளையாட்டாக சொல்ல . . . .

அதான் அவளோட டிஸ்க் ஒண்ணு இருக்கே . . . அதை வச்சு அவளைப் பழையபடி கீர்த்தியா மாத்து. இல்லேன்னா உன்னைக் கொன்னுடுவேன் - மஞ்சுளா அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.

பிந்து ஆரம்பித்தாள்.

இது எங்க அப்பாவோட கண்டுபிடிப்பு. சட்டப்படி அவரோட ரிஜஸ்டர்டு பிராபர்டி. சரியான சைபர் சட்டம் வர்ர வரைக்கும் இதை யாரும் பயன்படுத்தக் கூடாதுன்னு நான் கோர்ட் ஆர்டர் வாங்கப் போறேன். இல்லைன்னா கஷ்டப் பட்டு எல்லாரும் வளர்க்கிற திறமையெல்லாம் இளவேந்தன் மாதிரி ஆட்கள் கொள்ளையடிச்சுடுவாங்க.

தினேஷ் இதுக்கும் நீங்கதான் எனக்கு உதவி பண்ணணும். - பிந்து கேட்டுக் கொண்டாள்

தினேஷ் புன்னகைத்தவாறே தலையசைத்தான்.

டிசம்பர் மாதத்து இரவு வேகமாக சென்னையின் மேல் இருளைப் போர்த்தியது..

கருத்துகள் இல்லை: